28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.சந்திவெளி பொலிஸ்
நிலையத்தில் நிகழ்வுகள்

இலங்கையின் 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் தின வார நிகழ்வுகள் மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.கடந்த 3ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளள பொலிஸ் தின வார நிகழ்வுகளில்விளையாட்டு நிகழ்வுகள்,போதைப்பொருள் ஒழிப்பு,டெங்கு ஒழிப்பு,மருத்துவ நடமாடும் சேவை என பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி எம்.சுதர்சன் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸ்மா அதிபர் சி.வி.விக்கிரமரட்னவின் ஆலோசனையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ராஜிதஸ்ரீயின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சரத்குமார,மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால,மற்றும் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிலங்க ஆகியோர்களது நெறிப்படுத்தலில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடைபெறவுளள்ளது.

சந்திவெளி பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி எம்.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேசத்தில் திறன்பட செயற்பட்ட பொலிசார் மற்றும் பொலிஸ் உபதேச குழுக்களின் பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க மற்றும் மதகுருமார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles