கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக சிற்றுண்டிச் சாலைகளில், சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்களே, தமது உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முட்டை ரொட்டி, பராட்டா, மரக்கறி ரொட்டி மற்றும் ரோல்ஸ் உள்ளிட்ட சிற்றுணவுகளின் விலைகள் 10 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிகக்கப்பட்டுள்ளது. தற்போது சிற்றுண்டிச் சாலைகளில் அரை இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 250 ரூபா என்ற அளவிலும், கால் இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 180 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக நுகர்வோரை பாதுகாப்பதற்காக தாங்கள் விலைகளை தீர்மானித்த போதிலும், தற்போது சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களே விலைகளை அதிகரித்துள்ளனர். கருப்புச்சந்தை வர்த்தகர்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நுகர்வோரே பாதிக்கப்படுகின்றனர். 600 ரூபாவாக்கு விற்பனை செய்யப்பட்ட கொத்து ரொட்டி, 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மரக்கறி ரொட்டி, 120 ரூபாவுக்கு விற்பனை செய்யபடுவதாகவும் அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.