29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மந்த போசணை தொடர்பாக பாராளுமன்றில் இன்றும் நாளையும் விவாதம்

நாட்டில் பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்த போசணை தொடர்பாக யுனிசெவ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பில் இரண்டு நாள் விவாதம் பாராளுமன்றத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது விவாதம் தொடர்பான பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும். பாராளுமன்றம் இன்று முதல் எதிவரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார். இதன் பிரகாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிர்வாகம் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் இன்று காலை 10.30 இல் இருந்து 10.45மணி வரை சமர்ப்பித்து, விவாதிக்காமல் அனுமதித்துக் கொள்ள இருக்கின்றது. அத்துடன், வருட மத்தியில் அரச நிதி நிலைமை தொடர்பான 2022 ஆம் வருடத்துக்கான அறிக்கை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles