29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனையில் பொலிஸாருக்கான
மருத்துவ முகாம் முன்னெடுப்பு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் அஸ்மி வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கான மருத்துவ முகாம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதன் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பிரிவு, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு போக்குவரத்து பிரிவு, சிறு குற்றத்தடுப்பு பிரிவு ,பெருங் குற்றத்தடுப்பு பிரிவு , சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவு உத்தியோகத்தர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு பயன்பெற்றனர்.இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொலிஸாருக்கு போசாக்கான அறிவை மேம்படுத்தும் நோக்குடன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles