அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள 22 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 35 யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சி நெறிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்று இருந்தன.இவ் பயிற்சி நெறிகளானது இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக லண்டனில் உள்ள பி.பி. லண்டன் பிரப்பெட்டி லிமிட்டட் அமைப்பின் நிதி உதவியுடன் இடம்பெற்று இருந்தன.இவ் சுயதொழில் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் கேக் கண்காட்சிகளும் இன்று திருக்கோவில் பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்று இருந்தன.
இவ் பயிற்சி நெறியானது கடந்த இரண்டு வாரகாலமாக இடம்பெற்று வந்ததுடன் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டு இருந்ததுடன் இப் பயிற்சி நெறியின் வளவாளராக பிரபல கேக் வடிவமைப்பாளர் என்.கலைச்செல்வி பயிற்சி நெறிகளை வழங்கி வைத்திருந்தார்.இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிருவாக அதிகாரி ரீ.மோகனராஜா மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.முபாரக் அலி பிரதேச இளைஞர் கழகங்களின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரீ.நிசாந்தன் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.