உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு உளவியல் ஆலோசனை மையத்தின் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.மட்டகளப்பு கல்லடிப்பாலத்திலிருத்து ஆரம்பித்து பிரதான வீதியினூடாக நடைபவனியாக சென்று
காந்திபூங்காவில் நிறைவடைந்தது.
இதனைத்தொடர்ந்து சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் உதவி விரிவுரையாளர்களான ந.வர்ணராஜ் மற்றும் மு.கேமராஜின் தலைமையில் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.நடைபவனியில் மட்டக்களப்பு உளவியல் ஆலோசனை மையத்தின் உறுப்பினர்கள்,இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.