விவசாய அமைச்சர் வவுனியாவிற்கு விஜயம் – விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

0
196

விவசாய அமைச்சர் மற்றும் மாவட்ட விவசாய சம்மேளனத்தினருக்கும் இடையிலான கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது விவசாயிகள் நெல்லினை அறுவடை செய்து விற்பனை செய்வதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மாவட்ட விவசாயிகள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கமலதாசன் மற்றும் விவசாய சம்மேளன முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை வவுனியா ஒமந்தைக்கும் அமைச்சர் மகிந்த அமரவீர விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அப்பகுதியில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகளை பார்வையிட்டதுடன், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் உடனிருந்தனர்.