மட்டு.வின்செட் மகளிர் தேசிய
பாடசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு

0
185

திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு வின்செட் மகளிர் தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்றது.

வன்னிக்கோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்துடன் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை இணைந்து பாடசாலை அதிபர் உதயகுமார் தவதிருமகள் தலைமையில் மாணவர்களுக்கான திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பாடசாலையில் நடாத்தப்பட்டது.

பாடசாலை சுகாதார கழக மாணவர்களின் வரவேற்புடன் நடைபெற்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் மனித செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் உக்காத கழிவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்பட்டு மீள்சுழற்சி செய்யப்படவேண்டும் என்பது தொடர்பாக கருத்துக்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் ,மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் , வலயக்கல்வித் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் ஜூடி ஜெயக்குமார் ,தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் அதிபர் அருட்சகோதார் மைக்கல், பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்