கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவ, பொருப்பன பாலத்திற்கு அருகில் விருந்துக்கு சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 34 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் காயமடைந்துள்ளார். நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் பெண்ணும் அவரின் கணவரும் விருந்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் பொருபன பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவரே அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணும் அவரது கணவரும் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். மற்றையவர் ஊரவர்களால் பிடிக்கப்பட்டார். இந்தநிலையில் பெண்ணை விருந்துக்கு அழைத்தவர்களே தம்பதியினரை தாக்கியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.