38 துவிச்சக்கர வண்டிகளை திருடிய ஒருவர் கைது!

0
165

கம்பஹா, ஒருதொட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவர் திருடப்பட்ட 38 துவிச்சக்கர வண்டிகளுடன் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என கூறப்படும் குறித்த நபர் தனக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொள்ள இந்த துவிச்சக்கர வண்டிகள் திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பல சைக்கிள்களின் விலை சுமார் 100,000 ரூபா எனவும் இவற்றில் 21 சைக்கிள்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.