மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கந்தையா யோகவேள் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், மட்டக்களப்பு பிராந்திய நீர்பாசன பணிப்பாளர் என். நாகரெத்தினம், மாவட்ட விவசாய பணிப்பாளர் இராஜதுரை ஹரிகரன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் விவசாயத்திற்குப் பொறுப்பான தலைவர் அருளானந்தராஜா ரமேஸ், மாவட்ட சம்மேளனத்தின் பிரதித் தலைவர் உள்ளிட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது பெரும் போகத்திற்கான விதைப்பு கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் விவசாயத்திற்கான உள்ளீடுகளான யூரியா, களை நாசினிகள், அடிக்கட்டுப்பசளை மற்றும் எரிபொருள் உள்ளிட்டவை இன்னும் கிடைக்கப்பெறாமை தொடர்பாகவும், உள்ளீடுகள் கிடைக்கும் பட்சத்தில் விதைப்பில் ஈடுபடுவதற்கான காலத்தினை தீர்மானிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அண்மையில் விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள 4000 மெற்றித் தொண் யூரியா கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் 15 வரை மானாவாரியை நம்பி செய்கை பண்ணும் வயல் நிலங்களை விதைப்பதெனவும், 25.முதல் நவம்பர் 25.வரையான காலப்பகுதிக்குள் காலபோகத்திற்கான (நீர்ப்பாசனம்) விதைப்பினை மேற்கொள்வதென இதன் போது தீர்மாணிக்கப்பட்டதுடன், குறித்த காலப்பகுதிக்குள் உள்ளீடுகள் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் தாம் இம்முறை பெரும் போகத்தை கைவிடப்போவதாகவும் இதன்போது விவசாயிகளால் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.அரசினால் வழங்கப்படும் 30 வீதமான குப்பைப் பசளை எனப்படும் சேதனைப்பசளை தமக்கு தேவையில்லையெனவும் குறித்த பசளையில் வெறும் உமியும், மண்னும், கோழி எருவுமே இருப்பதால் விவசாயிகளுக்கு சிரமமே தவிர எந்தவித நண்மையும் இல்லையென இதன்போது விவசாயிகளால் வலியுறுததப்பட்டது.எதிர்வரும் 8,9 மற்றும் 10 திகதிகளில் வசதியான ஒரு தினத்தில் மாவட்ட விவசாய குழு கூட்டத்தினை கூட்டி அதில் இறுதி முடிவுகளை எட்டுவதாக தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அடுத்த மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென அதிகாரிகளிடம் விவசாய பிரதிநிதிகள் இதன்போது வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.