புகையிரதம் ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் தொடருந்து சேவைக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளது. சரக்குகளை ஏற்றிச்செல்லும் புகையிரதம் வெல்லவ பகுதியில் நேற்றிரவு தடம்புரண்டது. இதன்காரணமாக, காங்கேசன்துறை முதல் கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த புகையிரத சேவை, மஹவ புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், கொழும்பு – கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி பயணிகத்த புகையிரத சேவை குருநாகல் வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், வடக்கு புகையிரத சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.