நுவரெலியா கொட்டகலை – திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில்
உள்ள வீடொன்றின் பின்பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியுள்ளது.
உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் வழியில், வீடொன்றின் பின்பகுதியில் சிக்கியிருக்காலம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிறுத்தைப் புலியைக் கண்ட வீட்டு உரிமையாளர்களும், பிரதேசவாசிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன்,
நுவரெலியா வனஜீவராசிகள் காரியாலயத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுத்தைப் புலியை பார்வையிட அதிகளான மக்கள் குவிந்த நிலையில், அவர்களை பொலிஸார் வெளியேற்றினர்.