அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்பு

0
119

கொழும்பு, பேலியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெல்லிகலவத்த பிரதேசத்தில், அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

பொலிஸ் அவரச தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சுமார் 40 – 50 வயது மதிக்கத்தக்க 5 அடி 7 அங்குல உயரமுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.