சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்தார்.
உணவு தரம் குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் தரப்பினரை வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொண்டோம்.
அது மாத்திரமின்றி நுகர் விவகார அதிகார சபை உத்தியோகர்த்தர்களையும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் சென்று பரிசீலிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தேன்.
இரு தரப்பினரும் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் சிறைக்கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.