மின்சார பாவனையாளர்களிடமிருந்து மின்சாரக் கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இந்த வரி அறவீடு அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் அறவிடப்படும். இதேவேளை, நடப்பு மாதமான ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையின் மின்சாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது. இதன்படி, இலங்கை மின்சார சபையில் மின்சாரம் பெறும் தரப்பினரால் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.