இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து இந்தியா ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்களை ராமேஸ்வரம் மீனவர்கள் முன்வைத்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாளையதினம் இந்திய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் 21 ஆம் திகதிக்குள் மீனவப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரியும், தமிழக அரசின் துணையோடு மீனவ அமைப்புகள் வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது தவறும் பட்சத்தில் உலக மீனவர் தினமான 22ஆம் திகதி ரயில் மறியல் போராட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Home முக்கிய செய்திகள் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்த திட்டம்