முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவுத் திணைக்களத்திற்கு போலியான பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தமை தொடர்பிலான வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவரின் சட்டத்தரணி புத்திக சந்திரசேகர, கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி விசாரணையை 2023 பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
சஷி வீரவன்ச, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவுத் திணைக்களத்திற்கு போலியான பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் 1967 இல் பிறந்தார். இருப்பினும், ராஜதந்திரக் கடவுச்சீட்டில் அவர் 1971 இல் பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது பிள்ளையின் பிறப்புச் சான்றிதழில் அவர் 1977 இல் பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெறுவதற்காக போலி ஆவணங்களை அவர் சமர்ப்பித்ததாக அரசுத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.