முல்லைத்தீவு, துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட, ‘கரும்புள்ளியான் குடி நீர் விநியோகத் திட்டத்தை’, வேறு மாவட்டங்களுக்கு திசை திருப்பாமல், மீண்டும் அதே பிரதேசத்தில் ஆராம்பிக்க, ஜனாதிபதியும் அரசாங்கமும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணை தொடர்பில் உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
Home வடக்கு செய்திகள் பாண்டியன்குளம், கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : ரிஷாட் வேண்டுகோள்