மாத்தளை தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழிற்சாலையொன்றில் பணியாற்றிவந்த நபரொருவர் போக் லிப்ட் இயந்திரத்தில் நசுங்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளன்ர.
தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் போக் லிப்ட் இயந்திரத்தை இயக்கும் சாரதியாக பணியாற்றியுள்ளர் என்றும் போக் லிப்ட் இயந்திரத்தை பின்னோக்கி செலுத்த முற்பட்டபோது அவர் எதிர்பாராதவிதமாக போக் லிப்ட் இயந்திரத்தில் நசுங்குண்டு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.