ஜா-எலயில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹோட்டலுக்குள் நேற்றிரவு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொலை இடம்பெற்ற போது, அங்கு ஹோட்டல் உரிமையாளரின் மனைவியும் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
55 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.