பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக, தேசிய பாதுகாப்புக்கான விசேட சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கான வரைவு, விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு பதிலாக, தேசிய பாதுகாப்புக்கான விசேட சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான வரைபை, எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முதல் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.
அத்துடன், ‘ஊழலுக்கு எதிரான சட்டவரைபை நாம் தற்போது தயார் செய்துள்ளோம்.
தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கு பதிலாக, புதிதாக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவை, இதன் ஊடாக ஸ்தாபிக்கவுள்ளோம்.
அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற்சென்று செயற்படும் அதிகாரத்தை, குறித்த சட்டத்தின் ஊடாக, இந்த ஆணைக்குழுவுக்கு நாம் வழங்கவுள்ளோம்.
என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.