யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் ஒளிவிழா நிகழ்வு

0
137

இராணுவத்தின் 551வது படைப் பிரிவினருடன், யாழ்ப்பாணம் வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் இணைந்து ஒளிவிழா நிகழ்வை நடாத்தியுள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் நிகழ்வு இடம்பெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்க்குள் வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், பாடல்கள், உரைகள் என இடம்பெற்றன. நிகழ்வில் அருட்தந்தையர்கள், சிவாச்சாரியார், மௌலவி மற்றும் 55வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, பருத்தித்துறை பிரதேச சபை சிறப்பு தவிசாளர் ச.அரியகுமார், பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் ஜோ.இருதயராசா, உப பொலிஸ் அத்தியட்சகர் சந்திம இத்துமால் கொட, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி, வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தியபாலன், அருட்சகோதரிகள், இராணுவ அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.