இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய அலுவலகம், இன்று, கொழும்பு 07 பான்ஸ் பிளேசில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம், அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் தான் யாங் தாய் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.