நுவரெலியா ஹட்டன் சாமிமலை தெய்வகந்த தமிழ் வித்தியாலயம் முன்பாக, பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

0
160

நுவரெலியா ஹட்டன் கல்வி வலயம், கோட்டம் மூன்றுக்கு உட்பட்ட சாமிமலை தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்தை கைப்பற்றி வைத்திருந்த ஆசிரியரை வெளியேறுமாறு கோரி, பெற்றோர்கள், இன்று காலையில் இருந்து, வித்தியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று, மூன்றாம் தவனையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கை ஆரம்பமான நிலையில், தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்தின் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவருக்கு, ஹட்டன் வலய கல்வி பணிமனையின் ஊடாக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பாடசாலைக்கு, புதிய அதிபர் ஒருவரை பொறுப்பேற்குமாறு, வலய கல்வி பணிப்பாளரினால், எழுத்து ழூலமாக கடிதம் ஒன்று அனுப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், இன்று காலை, வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் சென்ற போது, குறித்த ஆசிரியரினால், புதிய அதிபருக்கு இடையூறு விளைவிக்கபட்டமையினால், பெற்றோர்கள், அதிபர் தரம் இல்லாத ஆசிரியரை, வித்தியாலயத்தை விட்டு வெளியேறுமாறும், புதிய அதிபரை, வித்தியாலயத்தை பொறுப்பேற்குமாறும் கோரி, ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய அதிபரை, கடமைகளை பொறுப்பேற்றக விடாது, குறித்த ஆசிரியர், வித்தியாலயத்தை விட்டு வெளியேற முயற்சித்த போது, பெற்றோர்கள், குறித்த ஆசிரியரை சுற்றிவளைத்தனர்.
சம்பவம் தொடர்பில், தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்திற்கு சென்ற கோட்டம் மூன்றுக்கு பொறுப்பான கோட்ட கல்வி பணிப்பாளர் சிவக்குமார், பெற்றோர்களோடு கலந்துரையாடினார். அதன் பின்னர், கோட்ட கல்வி பணிப்பாளர் முன்னிலையில், புதிய அதிபர், கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.