வவுனியா – உக்குளாங்குளத்தில் 3 ஆவது டெங்கு நோயாளரொருவர் இனங்காணப்பட்டதோடு, மாவட்டத்தில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் இதுவரை 8 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 3 பேர் உக்குளாங்குளம் கிராமத்தவர்களாவர். சுகாதார பரிசோதகர்கள் டெங்கு பரவும் அபாயம் உள்ள இடங்களை அடையாளங் கண்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.