தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண பேராயராக வே.பத்மதயாளன் தெரிவு

0
153

தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்தின் 5வது பேராயர் வே.பத்மதயாளன் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும், வட்டுக்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் நேற்று இடம்பெற்றது. விசேட ஆராதனைகள், பேராயர்களின் உரை, யாழ்ப்பாண ஆதீனத்தின் 5 வது பேராயரைக் கௌரவிக்கும் நிகழ்வு என்பன இடம்பெற்றன. நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீ சற்குணராஜா, தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.