உள்ளுராட்சி மன்ற தேர்தலை இடைநிறுத்தக் கோரி, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு, இரு நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் வடகல மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரங்க குணசேகர ஆகியோரால், இன்று, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.