நோயை கண்டறியும் வரை தேவையற்ற கிருமிநாசினி பாவனையை தவிர்க்குமாறு கோரிக்கை

0
315

நெற்பயிர் செய்கைகளுக்கு தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் நோயை உரிய வகையில் கண்டறியும் வரை தேவையற்ற கிருமிநாஷினிகள் பயன்பாட்டை தவிர்க்குமாறு விவசாய திணைக்களம் கோரியுள்ளது.

இது தொடர்பிலான ஆலோசனைகளை 037 22 58 561 அல்லது 1920 என்ற இலக்களுக்கு தொடர்பு கொள்வதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பத்தல்கொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜயந்த சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பயிர்களில் நோய் நிலமைகள் அவதானிக்கப்பட்டால் உடனடியாக பிரதேசத்திலுள்ள விவசாய செயற்திட்ட அலுவலகர் காரியாலத்திற்கு அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல மாவட்டங்களில், நெற் பயிர்ச்செய்கை சார்ந்த பல நோய்கள் பரவி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடுகள், வட்டப்புழு நோய், மாவுப்பூச்சி நோய், பழுப்பு புள்ளி நோய் என்பன நாட்டின் பல மாவட்டங்களில் பதிவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.