மட்டக்களப்பு கூழாவடியில் அந்தோனியாரின் திருவுருவச் சிலையிலிருந்து, இரத்தம் வடிவதாக வெளியான தகவலையடுத்து, பெருமளவான மக்கள் அப் பகுதியில் குவிந்தனர். இதனால் அப் பகுதியில் சன நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தும் தடைப்பட்டது. நேற்று மாலை அந்தோனியாரின் திருச் சொருபத்தை வழிபடச் சென்றவர்களால், சிலையிலிருந்து இரத்தம் வடிந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.