துருக்கி நிலநடுக்கம் : 278 மணி நேரத்தின் பின் உயிருடன் ஒருவர் மீட்பு

0
182

துருக்கி நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு 278 மணி நேரம் கடந்துள்ள நிலையில் இடிபாடுகளுக்குள்ளிருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் கடந்த 6ம் திகதி ஏற்பட்ட நில நடுக்கம் அந்த நாட்டையே உலுக்கியது. அதன் அண்டை நாடாகிய சிரியாவும் இந்த நில நடுக்கத்தால் பெரும்பாதிப்புக்கு உள்ளானது. இவ்விரு நாடுகளிலும் பல மாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களையும், உயிரோடு இருப்பவர்களையும் தேடும் பணி தொடர்ந்தவண்ணம் உள்ளது. துருக்கியில் 12 நாட்களுக்குப் பின்னர் இடிபாடுகளுக்குள் இருந்து 45 வயதுடைய நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளமை மீட்புக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 12 வயதுச் சிறுவன் உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.