இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘சுகன்யா’ என்ற கப்பல், நல்லெண்ண விஜயமாக, கொழும்பு வருகை

0
162

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘சுகன்யா’ என்ற கப்பல், நல்லெண்ண விஜயமாக, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று காலை, கொழும்பை வந்தடைந்த கப்பலை, இலங்கை கடற்படையினர், கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்றனர்.

300 அடி நீளமான இந்தக் கப்பலில், 106 பணியாளர்கள் உள்ளனர்.

அந்தவகையில், கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் பிரணவ் ஆனந்த், மேற்கு கடற்படை கட்டளை பிரிவின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.

இலங்கை வந்துள்ள இந்திய கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து, பயிற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாளை மறுதினம், இந்தியா திரும்பவுள்ளனர்.