வாழைச்சேனை கண்ணகிபுரம் கிராம சேவகர் பிரிவில் இலவச அரிசி

0
250

மட்டக்களப்பு வாழைச்சேனை கண்ணகிபுரம் கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 592 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக பத்து கிலோ அரிசி வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயாநந்தி திருச்செல்வத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது.


கோறளைப்பற்று பிரதேசத்தில் 7ஆயிரத்து 833 குடும்பங்களுக்கு அரிசி விநியோகிகப்படவுள்ளது.


வாழைச்சேனை கண்ணகிபுரம் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்ற அரிசி விநியோகிக்கும் நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச செயலக திட்ட பணிப்பாளர் ஆர்.கங்காதரன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.