27 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விரட்டியடிக்க துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் ஆத்திரமடைந்து வனவிலங்கு அதிகாரியை துரத்திச் சென்று கொன்ற யானை!

கலன்பிந்துனுவ பிரதேசத்துக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்டச் சென்ற ரித்திகல வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பி.எம்.விஜய்கோன் என்பவரே உயிரிழந்துள்ளார். 

சுமார் இருபது பேர் கொண்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த யானையொன்று வனவிலங்கு அதிகாரிகளைத் துரத்திச் சென்ற நிலையில் அவர்களில் ஒருவரைக் கொன்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles