நீதிக்காக காத்திருப்பவர்களிற்கு ஆதரவை வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்

0
333

இலங்கையில் உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டு நீதிக்காக காத்திருப்பவர்களிற்கு அமெரிக்கா ஆதரவாகவுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்  அவர்களின் உறவுகள் மற்றும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை அமெரிக்கா கௌரவிக்கின்றது நீதிக்காக காத்திருப்பவர்களிற்கு ஆதரவை வெளியிடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் நான்குவருடங்களிற்கு முன்னர்   உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரமான சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து அமெரிக்கர்கள் உட்பட அப்பாவி பொதுமக்களை நான் இன்று நினைவுகூறுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.