ருவாண்டாவில் வெள்ளத்தினால் 109 பேர் பலி

0
131

ருவாண்டாவில் வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரச  ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் மேற்குப் பிராந்தியத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, வட பிராந்தியத்தில் 14 பேர் உயிரழந்துள்ளனர். 

பல வீடுகளும் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று பெய்த கடும் மழை காரணமாக. சேபேயா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதாகவும் மண்சரிவுகளும் ஏற்பட்டதாகவும்  ருவாண்டாவின் மேற்கு மாகாண ஆளுநர் பிராங்சுவா ஹபிட்டேகெகோ தெரிவித்துள்ளார்.