சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை மேலும் ஈர்க்கும் வகையில் நுவரெலியாவை சிறந்த சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய நுவரெலியாவை சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், குழுவினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.