தம்புள்ளையில் கழிவுத் தேயிலை மீட்பு

0
112

தம்புள்ளை பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலையுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் தெரிவித்துள்ளது.

ஒரு தொகுதி கழிவுத் தேயிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவை மீட்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.