கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில், அக்போபுர மற்றும் கித்துல்உத்துவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இரண்டு யானைகளை மோதியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு காட்டு யானைகளும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு காட்டு யானை காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாகவே மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.