கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் 10 மணித்தியால நீர் வெட்டு

0
96
கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 4, 5, 7 மற்றும் 8 ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கும், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபை எல்லைக்கும், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுலில் இருக்கும்.அம்பத்தலே சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து விநியோகிப்படும் நீர் குழாய் உடைந்தமையே நீர் வெட்டுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.