கடவுச்சீட்டு மோசடி தொடர்பில் மேலும் 6 பேர் கைது

0
250

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தரகர்கள் போல் காட்டி பணம் பறித்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் நிதி மோசடிகளை ஹிரு செய்தி பிரிவு அண்மையில் வெளிக்கொண்டு வந்தது.

வரிசையில் காத்திருக்காமல் நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக கடவுச்சீட்டை பெற்றுத்தருவதாக சந்தேகநபர்கள் தலா 25,000 ரூபா வசூலித்தமை தெரியவந்தது.