வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

0
273

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உற்சவமான பாக்கு தெண்டல் உற்சவம் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடை பரவி வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றது.

பாக்கு தெண்டலுக்கு சென்றவர்கள் ஆலயத்தை வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து, நேற்றைய உற்சவம் நிறைவு பெற்றது.

பாரம்பரிய தெய்வமாகிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை அறிவிக்கும் முகமாக ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புகளை கொண்ட குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இது இடம்பெறுகிறது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் தீர்த்தம் எடுக்கும் உற்சவம் எதிர்வரும் 29ஆம் திகதி
இடம்பெறவுள்ளதோடு, காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் அடுத்த மாதம் 04ஆம் திகதி அன்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் 05 ஆம் திகதி அன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.