
வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித்திரிந்த 26 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது.
நேற்றையதினம் இரவு வவுனியா பண்டாரிக்குளம் மற்றும் வைரவர் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை நகரசபைக்கு செலுத்தி, மாடுகளை மீள பெற்றுக்கொள்ளமுடியும் என நகர சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.