
கஜகஸ்தான் நாட்டின் அபை மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது.
காட்டுத்தீயில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு, இராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.