இந்தியாவிலிருந்து முதலாவது பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

0
90

இந்தியாவிலிருந்து முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புனரமைக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகம் நாளை மறுதினம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணம் வரும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முதல் பயணிகள் கப்பலையும் வரவேற்பார் என அமைச்சு உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பயணிகள் கப்பல் சேவை பரீட்சார்த்த முயற்சியாகவே நடத்தப்படுகின்றது. இதனால், முதல் பயணிகள் கப்பல் சென்னையிலிருந்தே காங்கேசன்துறையை வந்தடையும்.

அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.