உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரும், ஆர்ஜென்டினா அணியின் தலைவருமான லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி கழகத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இன்டர் மியாமி கழகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி, அணியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த அணியில் இருந்து வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து அவர் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர் தற்போது அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.