கொஸ்லாந்தை பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர் கைது

0
132

பண்டாரவளை கொஸ்லாந்தை பகுதியில் மூவாயிரத்து 720 கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கொஸ்லாந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஸ்லாந்தை – அமகொல்லாவ பகுதியில் இருந்து சுமார் 3 முதல் 4 அடி உயரமுள்ள ஆயிரத்து 120 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் அதே பகுதியில் உள்ள பிறிதொரு இடத்திலிருந்து இரண்டாயிரத்து 600 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 50 வயதுடையவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை பண்டாரவளை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.