மஹரகமவில் கதிரியக்க நிபுணர்களால் பாதிக்கப்படும் நோயாளர்கள்.

0
100

கொழும்பு- மஹரகம அபேக்சா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் கதிரியக்க நிபுணர்களால் நோயாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுவதாக கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

கதிரியக்க நிபுணர்களின் அசமந்த போக்கினால் நோயாளிகள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு காத்திருக்கும் நோயாளர்களில் அவசரமாக சிகிச்சை தேவைப்படுபவர்களும் உள்ளனர்.

இந்நிலையில் ஒருநாள் தாமதம் கூட நிலைமையை குணப்படுத்த முடியாததாக மாற்றுவதோடு உயிரை காப்பாற்ற முடியாததாக மாற்றிவிடும் என புற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் மணித்தியாலத்திற்கு 8 முதல் 10 நோயாளிகளுக்கு சிகிச்சைவழங்கப்பட்ட நிலையில் தற்போது தொழில்நுட்பவியலாளர்களின் திறமையின்மை காரணமாக மணித்தியாலத்திற்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு மாத்திரம் சிகிச்சை வழங்கமுடிவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.