உக்ரைன் மீது ரஸ்யா படையெடுப்பதற்கு உதவிய ரஸ்யாவை சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.
ரஸ்யாவின் பாதுகாப்பு தொழில்நுட்பம் வலுச்சக்தி துறையை சேர்ந்த 35 அமைப்புகள் ரஸ்ய அமைச்சர்கள் சிரேஸ்ட அதிகாரிகள் பத்து பேருக்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது.
சர்வதேச சகாக்களுடனான இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுபவர்களை இது தடுக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இன்றைய தடைகள் ரஸ்யாவின் மீதும் அதன் சட்டவிரோத ஒழுக்கநெறியற்ற யுத்தத்தை ஆதரிப்பவர்கள் மீது அழுத்தங்களை தொடர்வது குறித்த அவுஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்தியுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தடைகள் உக்ரைனிற்கும் அதன் இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டிற்குமான அவுஸ்திரேலியாவின் ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.