கொழும்பு – நாரஹேன்பிட்டியில் கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது

0
83

நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன், பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சுங்க பிரிவின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருடன், இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது 2 கிலோவுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளுடன், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து, போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக வருகைத்தந்திருந்த நபர் ஒருவரும் 7 லட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.